ஜெயசுதா தனது பன்னிரண்டாவது வயதில் கமல்ஹாசனுடன் 1972 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’பண்டாண்டிகபுரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
1975-ல், அவர் தெலுங்கு திரைப்படமான ’லக்ஷ்மண ரேகா’வில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். மற்றும் ’ஜோதி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு, அவர் தெலுங்கு படங்களில் பெரிய நட்சத்திரமாகி, மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இன்றும் தெலுங்கு மற்றும் தமிழில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ’வாரிசு’ படத்தில் விஜய் அம்மாவாக நடித்தார்.