உடனடியாக பள்ளி நிர்வாகம் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சிறுவனை விரைந்து அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சாக்லேட் சாப்பிட்ட சிறுவனின் தொண்டையில் அது எதிர்பாராதவிதமாக சிக்கி, சிறுவன் மூச்சுத் திணறி இறந்த சம்பவம், மாநிலம் தாண்டியும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் இறந்த நிலையில் இதுவரை குடும்பத்தினர் தரப்பில் இருந்து, எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் குழந்தைகளுக்கு உணவுப் பொருள்களை சாப்பிடக் கொடுக்கும் போது, தொண்டையில் சிக்காத வகையில் அதை சிறு துண்டுகளாக்கிக் கொடுப்பது நல்லது. அதோடு உணவுகளை அப்படியே விழுங்காமல், நன்றாக மென்று திண்ணும் பழக்கத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.