விழுப்புரம்: அரசுப் பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; சொத்து பிரச்னை காரணமா? | Govt school teacher brutally attacked in Villupuram police investigation goes on

Share

அப்போது, பள்ளியின் வாயில் அருகே வந்த அவரின் அண்ணன் ஸ்டாலின், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு நடராஜின் கையிலும், முதுகிலும் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் சிலர், அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெட்டுக் காயமடைந்த ஆசிரியரை மீட்ட சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த வளவனூர் காவல்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

அதனைத் தொடர்ந்து, ஆசிரியரை வெட்டிய ஸ்டாலினை கைதுசெய்த போலிஸார், 295(b), 324, 506(2) ஐ.பி.சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்னையின் காரணமாக சொந்த அண்ணனே, ஆசிரியரான தம்பியை பள்ளி வாசலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com