இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்தான். ஆனால் கேப்டன்ஷிப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைத்தான் இவரும் பின்பற்றி வருகிறார். அவர் தனக்கென்று ஒரு தனி டெம்ப்ளேட்டை உருவாக்கவில்லை. விராட் கோலி கேப்டன்ஷிப்புக்கும், ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்புக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை.
இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி, அஷ்வின், ஜடேஜாவை எப்படி அணிக்காகப் பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித் சர்மாவும் தற்போது பின்பற்றுகிறார். ஆகவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் போதுதான் ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.