விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். ஆடம்பரம் மற்றும் ஆரவாரங்களில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
கடந்தாண்டு இந்தியாவை விட்டு லண்டனில் விராட் – அனுஷ்கா தம்பதி குடிபெயர்ந்தனர். வேலை நிமிர்த்தமாக இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.
தங்களின் அதிகமான நாள்களை லண்டனில் செலவிட்ட தம்பதி தற்போது அங்கேயே குடிபெயர்ந்து உள்ளனர்.
அனுஷ்காவும் விராட் கோலியும் லண்டனில் குடி பெயர்ந்ததற்கான உண்மையான காரணங்கள் வெளிவந்துள்ளன.
நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாயை தனது பாட்காஸ்டில் பேச வைத்தார். அப்போது இருவரும் விராட் கோலி மீதான அபிமானத்தை பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் உரையாடலின் போது டாக்டர் ஸ்ரீராம் நேனே அனுஷ்காவுடனான தனது உரையாடலை நினைவு கூர்ந்தார்.
ஒரு நாள் அனுஷ்காவுடன் உரையாடினேன். அது மிகவும் சுவாரஸ்சியமாக இருந்தது. அவர்கள் லண்டனுக்கு செல்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.