சிவ்ராஜ் சிங் செளகான் பேசிக்கொண்டிருந்த போது பாதியிலேயே தனது உரையை நிறுத்திவிட்டு, அடுத்தமுறை விரிவாக பேசுகிறேன் என்று கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டார். சாலைகள் மோசமாக இருப்பதால் சூரத் சென்று விமானத்தை பிடிப்பது தாமதமாகிவிடும் என்று கருதி உடனே சூரத் செல்லும்படி சிவ்ராஜ் சிங் செளகான் கேட்டுக்கொண்டார்.

சிவ்ராஜ் சிங் செளகானுடன் 22 கார்கள் சூரத் நோக்கிச் சென்றது. கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது 10 நிமிடம் கழித்துத்தான் திடீரென சிவ்ராஜ் சிங்கிற்கு தனது மனைவியும் தன்னுடன் வந்தது நினைவுக்கு வந்தது. அதோடு அவரை ஜுனாகாட்டில் விட்டுவிட்டு வந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. உடனே அவர் தனது மனைவிக்கு போன் செய்து பேசினார். வண்டியை திருப்புங்க, வண்டியை திருப்புங்க என்று கூறிய சிவ்ராஜ் சிங் செளகான் மீண்டும் அனைத்து வாகனங்களுடன் ஜுனாகாட் சென்றார்.
அங்கு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் சூரத் விமான நிலையத்திற்கு சென்றார். மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் தன்னுடன் மனைவி வந்தது கூட நினைவில்லாமல் மனைவியைவிட்டுவிட்டு சென்றது சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறது.