விபத்து நடந்த இடத்திலேயே அவசர சிகிச்சை செய்த கேரள மருத்துவர்கள் – சர்ச்சையானது ஏன்?

Share

கேரளா, மருத்துவம், சாலை விபத்துகள், கிரிகோதைரோடமி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மருத்துவர்கள் தாமஸ் பீட்டர், திதியா கே. தாமஸ் மற்றும் மனூப்

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள உதயம்பேரூர் எனும் பகுதியில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு நடந்த ஒரு சாலை விபத்தும், அந்த விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு 3 மருத்துவர்கள் அதே இடத்தில் அளித்த அவசர சிகிச்சையும் நாடு முழுவதும் கவனத்தைப் பெற்றது.

அந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த லினு என்ற நபர், மூச்சு விட சிரமப்பட்ட சூழலில் சாலையில் கிடந்துள்ளார். அப்போது, அந்த வழியாக பயணித்த மருத்துவர்கள் மனூப், தாமஸ் பீட்டர் மற்றும் திதியா கே. தாமஸ், காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியோடு, லினுவுக்கு ‘கிரிகோதைரோடமி’ (Cricothyrotomy) என்ற அவசரகால சிகிச்சையை அளித்தனர்.

“பொதுவாக போர் சூழல்களைத் தவிர்த்து, கிரிகோதைரோடமி சிகிச்சையை இப்படி பொதுவெளியில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், லினு மூச்சு விட முடியாமல் திணறுவதைக் கண்டேன். அப்படியே விட்டால், அவர் அங்கேயே உயிரிழந்திருக்கக்கூடும். எனவே, அந்தச் சிகிச்சையை சாலையில், முறையாகவே செய்தோம். அது பலனும் அளித்தது. ஆனால், அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லினு, புதன்கிழமை இரவு (டிசம்பர் 23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என பிபிசியிடம் கூறினார் மருத்துவர் மனூப்.

இருப்பினும், எந்தவித உபகரணங்களும் இன்றி, ஒரு ரேஸர் பிளேடு (Raser Blade) மற்றும் 3 ஸ்டராக்களைக் (Straw) கொண்டு, சாலையில் இவர்கள் செய்த அவசர சிகிச்சை பலராலும் பாராட்டப்பட்டது.

நடந்தது என்ன?

கேரளா, மருத்துவம், சாலை விபத்துகள், கிரிகோதைரோடமி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதி

“ஞாயிற்றுக்கிழமை இரவு நானும் என் மனைவியும் என் அம்மா வீட்டில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். 8.30 மணிக்கு உதயம்பேரூர் வந்தபோது, சாலையில் ஏதோ விபத்து நடந்திருப்பது தெரிந்தது. இறங்கி பார்த்தபோது, ஒரு நபர், படுகாயமடைந்த நபரின் தலையை சரியான முறையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் பிடித்திருந்த முறையைப் பார்த்ததும் அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம் என யூகித்து அருகில் சென்றேன்” என விவரித்தார் மருத்துவர் தாமஸ் பீட்டர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com