விஜய் ரூபானி: கடினமான நேரங்களிலும் பாஜகவின் கொடியை உயரப் பறக்கச் செய்த முதலமைச்சர்

Share

குஜராத், விஜய் ரூபானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்தில் பெரும் குழப்பம் நிலவியபோது விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்

வியாழக்கிழமை (2025 ஜூன் 12) ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

ரூபானிக்கு 68 வயது, அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக லண்டன் சென்று கொண்டிருந்தார் என அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு மனைவி அஞ்சலி, மகள் ராதிகா மற்றும் மகன் ருஷப் இருக்கின்றனர்.

குஜராத்தில் பெரும் குழப்பம் நிலவியபோது விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர், நரேந்திர மோதி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனால் அவர் குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நரேந்திர மோதியின் விசுவாசியான ஆனந்திபென் படேல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com