அதனைத் தொடர்ந்து மருத்துவர் சுலேகா சௌத்ரி, தன்னுடைய தைரியத்தையும் மன உறுதியையும் இழக்காமல் குழந்தையின் வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றைச் செலுத்தி உள்ளார். 7 நிமிடங்கள் வரை தொடர்ந்து இந்தச் செயல்முறையைச் செய்ததோடு, குழந்தையைக் குப்புறப் பிடித்து, முதுகில் பலமுறை தட்டித் தேய்த்து விட்டுள்ளார்.
குழந்தை அசைந்து உயிர்பெற்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் பெற்றது. மருத்துவரின் விடாமுயற்சிக்குப் பலரும் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பே இந்த நிகழ்வு நடந்து அனைவரின் கவனத்தையும் பெற்றபோதும், தற்போது மீண்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எத்தனை முறை பார்த்தாலும், மருத்துவரின் விடாமுயற்சியும், குழந்தை உயிர் பெரும் தருணங்களும் சலிக்காதவை தானே…