வருமான வரித்துறை சோதனை எங்கெல்லாம் நடக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது என்ன?

Share

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு,

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சென்னை, கரூர், கோவை என சுமார் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் இராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்தபோது அங்கு கூடியிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com