வரிக்கு பதிலடியாக வரி – டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

Share

டொனால்ட் டிரம்ப், நரேந்திர மோதி, பரஸ்பர வரிவிதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.

ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனால், உலகளவில் வர்த்தகப் போர் ஏற்படும் என்றும் உலகளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும் பதற்றம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் வரிவிதிப்பால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என, பிரிட்டன் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவை இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ள பதில் நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com