இதுகுறித்து கடந்த 5-ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர், கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. பிறகு, கடந்த புதன்கிழமையும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் நடந்திய பேச்சுவார்த்தையில் சமூக உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் இன்று நடக்கவிருந்த வங்கி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டு வங்கிகள் இயங்கின.