வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு சாதகமா? இந்திய நிபுணர்கள் அலசல்

Share

பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற வெற்றிக்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் வங்கதேசத்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தத் தங்கள் நாடு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் பிஎன்பி-யின் வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக பாகிஸ்தான் வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.

தாரிக் ரஹ்மானின் தாயாரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியாவின் நிலைப்பாடு பாகிஸ்தான் மீது நேர்மறையாக இருந்தது என்பதால் பிஎன்பி அரசு பாகிஸ்தானிடம் நட்பு ரீதியான அணுகுமுறையைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசு இந்திய ஆதரவு அரசாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு இளைஞர் போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 2024-ல் அவரது அரசு வீழ்ந்ததையடுத்து, இந்தியா மற்றும் வங்கதேசத்தின் உறவுகள் மோசமடைவது போல் தெரிந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com