
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பாட் கமின்சும், நேதன் லயனும் வெற்றி இலக்கை 55 ரன்கள் கூட்டணியுடன் எட்டியதில் இங்கிலாந்து தோல்வி கண்டது, இங்கிலாந்து ஊடகங்களையும் முன்னாள் வீரர்களையும் கடுமையாக கடுப்பேற்றியுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெறும் போது இங்கிலாந்து பழிக்குப் பழி வாங்கியே ஆக வேண்டும் என்றே அங்கு ரசிகர்களின் மனநிலை உள்ளது.
இந்நிலையில் டைம்ஸ் ரேடியோவில் பேசிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜாக் கிராலி, இந்தப் பிட்ச் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நாங்கள் வெற்றி பெறுவோம். லார்ட்ஸ் பிட்ச் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.