‘க்யூரேட்டர் மீது குற்றச்சாட்டு!’
ஜாகீர் கான் பேசியதாவது, ”இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் எனக்கு ஒரு விஷயத்தில் அதிருப்தி இருக்கிறது. இது எங்களின் சொந்த மைதானம். எங்களின் ஹோம் கேம் இது. ஐ.பி.எல் இல் அணிகள் சொந்த மைதானத்தை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், லக்னோ மைதானத்தின் க்யூரேட்டர் இதை லக்னோவின் ஹோம் கேமாகவே நினைக்கவில்லை.
பஞ்சாப் அணிக்கு சாதகமான பிட்ச்சையை அவர் தயார் செய்திருந்ததை போல தெரிகிறது. இப்படி நடப்பது இதுவே முதலும் கடைசியாக இருக்குமென நினைக்கிறேன். ஏனெனில், ரசிகர்கள் தங்களின் அணி சொந்த மைதானத்தில் வெல்வதை பார்க்க ஆவலுடன் வருகிறார்களே.
அவர்களுக்கும் இது அதிருப்தியையே கொடுக்கிறது. நாங்கள் தோற்றுவிட்டோம் அதை ஒத்துக்கொள்கிறேன். அடுத்த 6 ஹோம் கேம்களில் எப்படி வெல்வது என்பதைப் பற்றி திட்டமிட்டு வருவோம்.’ என்றார்.
ஏற்கனவே சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெம்மிங், கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே ஆகியோரும் இதே மாதிரியான கருத்தை தெரிவித்திருந்தனர்.