முக்கியமாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவுகளில் கொண்டு வரவில்லை. நான் பேச்சாளர் இல்லை. என் மகளை இழந்த வலியில் பேசினேன்.

சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பகிர்வது வருத்தமளிக்கிறது” என்றார்.
அண்ணாதுரையின் வழக்கறிஞர் குப்புராஜ் கூறும்போது, “இந்த வழக்கில் பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை சேர்க்கப்படவில்லை. காவல்துறையினர் கால தாமதம் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.” என்றார்.