ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை

Share

கோப்புப் படம்

பட மூலாதாரம், STR/AFP via Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.

பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது.

இந்த ஆறு பேரில் நளினியும் ரவிச்சந்திரனும் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தனர். நளினி வேலூரிலும் ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும் தங்கியிருந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com