ராகுல் காந்தி: “மதம், மொழியின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது”

Share

ராகுல் காந்தி

இந்திய குடிமக்களை மதம், மொழியின் பெயரால் பிளவுபடுத்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரையை துவக்கி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய மூவர்ண கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கினார். அப்போது வீர வணக்கம் செலுத்துவது போல சல்யூட் அடித்து தேசிய கொடியை ராகுல் பெற்றுக் கொண்டார்.

இந்த பயணத்தையொட்டி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.

இந்த யாத்திரையின் துவக்கமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், ஸ்வாரஜ் இந்தியா நிறுவனர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com