ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய ரிலையன்ஸ் – அமெரிக்கா கூறுவது என்ன?

Share

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு நிலையம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிலேயே அதிக ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் ஜாம்நகரில் உள்ள அதன் ஏற்றுமதிக்காக மட்டுமே சுத்திகரிக்கும் நிலையத்திற்கு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது.

அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும், மூன்றாம் நாடுகள் வழியாக ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளர்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீதான அமெரிக்கத் தடைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“2026 ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் தயாரிப்பு -இறக்குமதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதிசெய்ய, இந்த மாற்றம் திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது,” என்று ரிலையன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸின் இந்த நடவடிக்கையை வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com