””ரம்யாவுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை கொடுத்தார்; ஏன்னா..!”- ரம்யா பாண்டியன் அம்மா | actress ramya pandiyan mother shanthy duraipandiyan interview

Share

அதுவும், ரிஷிகேஷ்லதான் ரெண்டு பேரும் முதல் முதலில் மீட் பண்ணிக்கிட்டாங்கங்கிறதாலதான் அங்கேயே திருணத்தை வெச்சுக்கலாம்னு ரம்யாதான் சொன்னா. அதேமாதிரி, தாலியும் எங்க திருநெல்வேலி முறைப்படி கட்டணும்னு சொல்லியிருக்கா. ரம்யா சொன்ன எல்லாத்துக்குமே மாப்பிள்ளையும் ஓகே சொல்லிட்டார். சங்கீத், ஹல்தி ஃபங்ஷன் எல்லாம் அவரோட முறைப்படி பண்ணினோம்.

மாப்பிள்ளை ரொம்ப நல்ல டைப். திருமணத்துக்காக எந்த செலவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரம்யாதான், எனக்கு சுயமரியாதை இருக்கு. அதனால, ரிசப்ஷன் செலவை நான் ஏத்துக்கிறேன்னு அவளே பொறுப்பேற்றுக்கிட்டா. ரிஷிகேஷ்ல நடந்த திருமணத்துக்கான ஃப்ளைட் டிக்கெட், தங்கும் ஹோட்டல் உள்ளிட்ட எல்லா செலவுகளையுமே மாப்பிள்ளைதான் பார்த்துக்கிட்டார். பெரிய ஸ்டார் ஹோட்டல்ல செஃப்களை வைத்து ஆலோசனை செய்து அதற்கேற்றமாதிரி தென்னிந்திய, வட இந்திய உணவுகளை கொடுத்தாங்க. திருமணத்துக்கு வந்திருந்த ரெண்டு வீட்டு சொந்தங்களும் ரொம்ப நிறைவா வாழ்த்தினாங்க.

ரம்யா பாண்டியன் கணவர் லவல் தவானுடன்

ரம்யா பாண்டியன் கணவர் லவல் தவானுடன்

ரம்யா, சித்தப்பா அருண் பாண்டியனுக்கும் மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ரம்யா மாப்பிள்ளையை ஃப்ரண்டுன்னுதான் எங்கக்கிட்டே சொல்லிருந்தா. அவர், சென்னை வந்திருந்தப்போ முதல் தடவை வீட்டுக்கு சாப்பிட இன்வைட் பண்ணிருந்தா. அப்போ, அவங்க லவ் பன்றது எல்லாம் எங்களுக்கு தெரியாது. எல்லோர்கிட்டேயும் ரொம்ப அன்பா, பெரியவங்கக்கிடே ரொம்ப மரியாதையா பழகினார். அப்பவே, எங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com