தேவையானவை:
முருங்கைக்காய் – ஒன்று
துவரம்பருப்பு – அரை கப்
தக்காளி – 2
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – ஒன்று
ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேகவைக்கவும். புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். முருங்கைக்காயைக் கழுவி, 1 – 2 இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். தக்காளி மென்மையானதும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, மூடி போட்டு சில நிமிடங்கள் வேகவிடவும். இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விடவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ரசப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து, தேவையான நீர்விட்டு கடாயை பாதி அளவு மூடியால் மூடி கொதிக்க விடவும். ரசம் கொதிக்கும்போதே மற்றொரு கடாயில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து, வெடித்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். தாளிப்பை ரசத்தில் சேர்த்து இறக்கவும்.