அந்தவகையில் தற்போது தமிழக வீரரான முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “2011- 2015 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் முரளி விஜய். என்னைப் பொறுத்தவரை சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் ஒரு மிகசிறந்த தொடக்க வீரர். கவாஸ்கர், வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு தொடக்க டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுக்கு மேல் பதிவு செய்த ஒரே இந்திய வீரர் இவர்தான். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் சிறந்த டெஸ்ட் வீரராக செயல்பட்டவர்.