பின்னர் செய்தியாளர்களிடம் மாணிக் சஹா, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக இருக்கிறான். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அறுவை செய்தேன். ஆனாலும் சிரமமாக இல்லை” என்று தெரிவித்தார்.
மாணிக் சஹாவின் இந்த செயல், தான் கற்றுக்கொண்டது பிறருக்கு உதவும் எனில், வாழ்வின் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் அதை மீண்டும் செய்யவேண்டும் என்பதை பலருக்கும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.