தமிழக சட்டப்பேரவையில், இன்று மாணிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வினாக்கள் – விடை நேரத்தில், பேசிய திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். மேலும் திருவாரூர் மாவட்டம் தான் முதலமைச்சர் மாவட்டம் என உறுப்பினர் கூறினார், ஒட்டுமொத்த தமிழகமுமே முதலமைச்சரின் மாநிலம் எனவும், ஒட்டுமொத்த தமிழர்களும் அவர் வழியை பின்பற்றுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடையின்றி சீரான மின்சாரம் வழங்க ஏற்பாடு – அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
இதேபோல், கிணத்துக்கடவில் தக்காளிக்கான மதிப்புக்கூட்டு தொழிற்சாலை அமைக்க அரசு முன் வருமா என கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ அன்பரசன், தக்காளியை பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருட்கள் தயார் செய்ய தனியார் தொழில் முனைவோர் முன்வந்தால் மானியத்துடன் கூடிய கடன் பெற்று தொழில் தொடங்க அனைத்து வகையான உதவிகளையும் அரசு வழங்கும் என தெரிவித்தார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.