மார்ட்டின் லூதர் கிங் படுகொலை ஆவணங்கள் வெளியீடு

Share

மார்ட்டின் லூதர் கிங்

பட மூலாதாரம், Getty Images

சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை எஃப்.பி.ஐ. கண்காணித்து தயாரித்த கோப்புகள் உட்பட அவருடைய படுகொலை தொடர்பான ஆவணப் புதையலையே அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 230,000 பக்கங்கள் உள்ள இந்த ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக 1977ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மறைக்கப்பட்டிருந்தது.

லூதர் கிங் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இந்த ஆவணங்களை பயன்படுத்தி எங்கள் தந்தையின் நற்பெயரை கெடுக்கும் எந்த முயற்சியையும் கண்டிப்பதாக,” அவரது இரண்டு குழந்தைகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்டிஸ்ட் மத போதகராக இருந்த கிங், 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி தனது 39ஆவது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். தொழில்முறை குற்றவாளியான ஜேம்ஸ் ஏர்ல் ரே இந்த கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால் பின்னர் தனது வாக்குமூலத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com