மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்த மாநகரம் ஒன்றின் சிதைவுகளை அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடித்துள்ளார்கள் மெக்சிகோ நாட்டு தொல்லியலாளர்கள்.
மெக்சிகோ நாட்டில், யூகடேன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்தக் காட்டுப்பகுதியில் பல பிரமிடு போன்ற கட்டுமானங்களை இந்த தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் 50 அடிக்கு மேல் உயரமுள்ளவை. இவை தவிர, இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆராய்ந்தபோது இந்த இடத்தில் கி.பி. 600ம் ஆண்டு முதல் 800ம் ஆண்டு வரையிலான காலத்தில் மனிதர்கள் வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்தக் காலப்பகுதி ‘பிந்தைய செவ்வியல் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.