விசாரணையில், `மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கபடுகையில், நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊக்கம் குறைந்து போகலாம்’ என தலையீட்டாளர் (intervenor) தரப்பு வாதத்தை சமர்பித்திருந்தார்.
இது குறித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “மாதவிடாய் விடுப்பு வழங்குமாறு நிறுவன முதலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களைத் தடுக்கலாம் என்பது உண்மைதான்.
இந்த வழக்கின் கொள்கை பரிமாணத்தைப் பார்க்கையில், மனுதாரர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினை அணுகி பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யலாம்” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.