மழை ‘விளையாடியதால்’ ஐபிஎல் இறுதிப்போட்டி ரத்து: ரிசர்வ் டேவிலும் மழை பெய்தால் என்ன நடக்கும்?

Share

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

மாலையில் இருந்து இடைவெளிவிட்டு, தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, குறைந்த அளவு ஓவர்களில்கூட போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, ரிசர்வ் டே-க்கு ஒத்தி வைக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

இதையடுத்து, ரிசர்வ் டே-வான திங்கட்கிழமை, இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நாளையும் மழை குறுக்கிடாமல் இருக்கும் பட்சத்தில் 20 ஓவர்கள் கொண்டதாக போட்டி அமையும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com