மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

Share

பிரிஜ் பூஷன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

பிரிஜ் பூஷன் சரண் சிங்

பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தபோது அவர் கைது செய்வது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

ஏனென்றால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட புகாரில் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததான குற்றச்சாட்டுடன் கூடவே ஒரு பதின்பருவ மல்யுத்த வீரருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும்.

பிரிஜ் பூஷன் சிங் எல்லா குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை விட சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் தீவிரமானது என்று இந்திய சட்டம் கருதுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com