சென்னை: பாமக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஆண்டு தொடங்கினார். அதன்படி 251 நாட்களில் 2304 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மொத்தம் 17768 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த இயக்கம் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்வதற்குள் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கும்.