மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு, தனிப்படை அமைத்த ஐஜி – என்ன நடக்கிறது?

Share

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

மரக்காணத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்ட 27 பேர், மரக்காணம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் நேற்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி விழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com