மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை – பழிக்குப் பழியா… போலீஸ் விசாரணை!

Share

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “பா.ம.க-வின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தவர் தேவமணி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளி மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பழிக்கு பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஐந்து தனிப்படைகள் அமைத்திருக்கிறார்” என்றனர்.

சம்பவம் நடந்த இடம்

சம்பவம் நடந்த இடம்

“தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான பணியில் கலந்து கொண்ட மணிமாறன் காரைக்கால் திரும்பியுள்ளார். அப்போது, செம்பனார் கோயில் பகுதியில் சென்ற போது காரை வழி மறித்த கூலிப்படை, மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com