எனினும், அதைப் பொருட்படுத்தாத அவர், 4வது மாடி தடுப்புச் சுவரில் ஏறி, கீழே குதித்தார். கீழே விழுந்த ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய காவல்துறையினர், விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, விமான நிலைய காவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ஐஸ்வர்யா கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்ததாக உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்றனர்.

ஐஸ்வர்யா உறவினர்களிடம் பேசியபோது, “என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. ரொம்ப இறுக்கமாவே அவர் இருந்துள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வந்தால் சரியாகிவிடும் என்று நினைத்தோம். இப்படியாகும் என்று நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளையும் பார்க்கவே முடியவில்லை” என்றனர்.
ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ள உரிமையில்லை. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:
தற்கொலைத் தடுப்பு மையம் – 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் – 1091