அதில், “மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால், மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய பாலுறவு குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…
* சரியானது
* ஏற்புடையது அல்ல
* கருத்து இல்லை’’
எனக் கேட்டிருந்தோம்.
மொத்தம் 3,565 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `சரியானது’ என 17 சதவிகிதத்தினரும், `ஏற்புடையது அல்ல’ என 78 சதவிகிதத்தினரும், `கருத்து இல்லை’ என 6 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் கருத்து, மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால், மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய பாலுறவு குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல என்பதாகவே இருந்தது.
`நோ மீன்ஸ் நோ’ என்பது அனைத்து வயதிலும் பொருந்தும். இதில் வயதைக் காரணம் காட்டி தவற்றை நியாயப்படுத்த முடியாது.