மத்திய கிழக்கில் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன்? ஓர் அலசல்

Share

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா தோல்வியடைந்தது ஏன்?

  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, அமெரிக்க வெளியுறவு செய்தியாளர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, போர்க் காலத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான்.

டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் போர்க்கால அமைச்சரவையைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மக்களை குறிப்பிட்டு, “நீங்கள் தனியாக இல்லை” எனக் கூறினார்.

ஆனாலும், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா கோபத்தில் செய்த தவறுகளை போன்று செய்யக்கூடாது எனவும் இஸ்ரேல் தலைமையை ஜோ பைடன் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில், அதிபர் பைடன், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய உலகத் தலைவர்களின் அழைப்புக்குத் தலைமை தாங்கினார். அதற்கான தனது பதிலை நெதன்யாகு வெளிப்படுத்தினார். தங்களின் பெரும் பலம் மூலம் பிராந்தியத்தில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைய முடியும் என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com