மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், மம்தா பானர்ஜியின் ஆட்சி 2026-ல் தேர்தலைச் சந்திக்கும்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மேற்கு வங்க அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தில் என்னுடைய தலைமையிலான அரசைக் கவிழ்க்க நடத்தும் சதியில் அமித் ஷாவுக்கும் பங்கு இருக்கிறதா… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதாக மத்திய அரசின் பிரதிநிதி எப்படி இவ்வாறு பேசலாம்… அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்.