மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது

Share

மதுரை காவல் ஆணையர் அலுவலகம்

பட மூலாதாரம், TN Police

மதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் ஒரு மாணவி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு மருத்துவரும் புகாருக்கு உள்ளான அந்த மாணவியும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தனியார் பெண்கள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி இருக்கிறார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com