மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது காலணி வீசிய பாஜகவினர் கைது

Share

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு

மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்பு வீசிய சம்பவத்தில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி நிகழ்வுக்காக அமைச்சர் வந்தபோது அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் போராடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரம் அடைந்ததது. என்ன நடந்தது மதுரையில்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நண்பகலில் கொண்டு வரப்பட்டது.

அப்போது அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் இருந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக நிர்வாகிகள் சிலருடன் வந்திருந்தார். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினரும் வந்திருந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com