மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்

Share

மணிப்பூர் கலவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஹீரோக்லியன் கிராமத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து எழும் புகைக்கு அருகே நிற்கும் இந்திய ராணுவ வீரர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

மியான்மரின் எல்லையில் உள்ள மாநிலத்தில் மே 3 அன்று பழங்குடியினர் குழுக்கள் பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான Meitei உடன், பொருளாதார நன்மைகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பாக மோதலில் தொடங்கியது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தெய் சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பழங்குடியினரும், மெய்தெய் சமூகத்தினரும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது வன்முறையாக மாறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com