மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர் விஜய் ரூபானி சட்டமன்றத் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை முன்மொழிந்தார். அதனை கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோர் பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பெயரை வழிமொழிந்தார். அவர்களது முடிவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதனையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் புதிய பா.ஜ.க சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.