போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி! | The interrogation prisoner had a dispute with the police

Share

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மூவரும் நீதிமன்ற விசாரணைக்காக கடலாடி, கமுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து வேன் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com