மலையாள சினிமா நடிகர்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும் உள்ளதாகவும். தானும் மற்றொருவரும் மட்டுமே பழிக்கு ஆளாகியுள்ளோம் எனவும் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷைன் டோன் சாக்கோ-விடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸார் அன்று மாலை அவரை ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ள கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் மானிட்டரிங் மீட்டிங்கில் ஷன் டோம் சாக்கோ சினிமாவில் நடிக்க தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னாணி பகுதியில் நடந்த சினிமா படபிடிப்புக்கு இடையே ஷைன் டொம் சாக்கோ தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், பெண்மையை களங்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் நடிகை வின்ஸி அலோஸியஸ் கூறிய புகார்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா உள்ளிட்ட சினிமா சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 21 நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.