மறுபுறம் இதன் மூலமாக மாநகராட்சிக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர். “மாநகரில் வாகனங்கள் நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சாலையோர பார்க்கிங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.
குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், சி.பி. ராமசாமி சாலை, தி.நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் அமைத்திருக்கும் 10 வணிக வளாகங்களின் விவரங்களை சேகரித்திருக்கிறோம். இங்கு காலியாக இருக்கும் இடங்களில் பார்க்கிங் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.