பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் – பிரபலங்கள் சொல்லும் காரணம்

Share

கார்த்தி மற்றும் திரிஷா

பட மூலாதாரம், LYCA Production

’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது ‘பொன்னியின் செல்வன்’. எம்.ஜி.ஆர், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் ஷங்கர் என தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் படமாக எடுக்க முயன்று முடியாமல் போன இந்த நாவலை இயக்குநர் மணிரத்னமும் ஏற்கனவே ஒருமுறை முயன்று முடியாமல் போனது. ஆனாலும், மற்றொரு முயற்சியில் அது கைக்கூடியது. ஏராளமான கதாபாத்திரங்கள், சிக்கலான கதையமைப்பு கொண்ட நாவலை எப்படி திரைக்கதையாக்கி திரையில் படைக்கப்போகிறார் மணிரத்னம் என எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வந்தது ‘பொன்னியின் செல்வன்’.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com