பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?

Share

பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் 88 முதல் 92 சதவீதம் வரை பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 147 தலைமைப் பொது மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 135 பேர், அதாவது 92 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பொது மேலாளர் பதவிகளில் 667 பேர் இருக்கிறார்கள். 588 பேர் (88%) பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிற்படுத்தப்பட்டோரைப் பொருத்தவரை இந்த இரு பதவிகளிலும் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே இருக்கின்றனர்.

துணைப் பொதுமேலாளர் பதவிகளில் 81 சதவீதம் பொதுப் பிரிவினரும் 8 சதவீதமே பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். உதவி பொது மேலாளர் பதவிகளில் 72 சதவீதம் பொதுப் பிரிவினரும் 14 சதவீதம் பிற்படுத்தப்பட்டோரும் இருக்கின்றனர். தலைமை மேலாளர் பதவிகளில் 61 சதவீதம் பொதுப் பிரிவினரும் பிற்படுத்தப்பட்டோர் 19 சதவீதமும் உள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com