“பூனையை மிகவும் சிறியதாக இருக்கும் போதே காப்பாற்றி வளர்த்தேன். என்னுடைய உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் அளவிற்கு இருந்த பூனையோடு, இரண்டு வருடங்கள் கடந்து விட்டேன். இது கேட்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பென்ஜி என்னுடைய தந்தையின் மறுபிறப்பு என நான் நம்புகிறேன்.
பென்ஜியின் கண்களைக் காண்கையில், ஒரு பூனை என்பதைத் தாண்டி இன்னும் அதிகமாக என்னால் உணர முடிகிறது. ஆனால், என்னுடைய கணவர் இதை விநோதமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் உணர்கிறார்.
எனக்கும் பூனைக்கும் உள்ள நெருக்கம் தன்னை பயமுறுத்துவதாகவும், சங்கடமான சூழலைத் தருவதாகவும் அவர் உணர்கிறார். ஆனால், உண்மையில் அதற்கு என்னுடைய தந்தையின் ஆன்மா இருக்கிறது என நம்புகிறேன்” என மிகவும் ஆதங்கத்தோடு அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், பூனையை அருகில் உள்ள காப்பிடத்தில் கொடுத்துள்ளதாக, அப்பெண்ணின் கணவர் தெரிவித்து இருக்கிறார்.