இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புற்றுநோய் மருந்தில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான லெபனான் மற்றும் தென்மேற்கு ஆசியாவிலுள்ள ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள செலான் லேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த ஒரு பேட்ச் புற்றுநோய் மருந்தில், சூடோமோனஸ் என்ற வகையைச் சேர்ந்த பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

லெபனான் மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு, இந்த மருந்தைக் கொடுத்த பிறகு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதையடுத்து, மருந்துகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற தரமில்லாத மருந்துகளைப் பயன்படுத்தும் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அந்நாட்டு அரசுகள் எச்சரித்துள்ளன.