தொடர்ந்து மூன்று வாரங்கள் என ஆறு மாத காலத்திற்கு தொடர்ச்சியாக இவர்கள் அனைவருக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகளும், கட்டிகளும் மறைந்ததோடு, அனைவரும் குணமடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
புற்றுநோய் வரலாற்றிலேயே முதல்முறையாக இது சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ.டயஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமல்ல, வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனையின் முடிவுகள் நம்பகத்தன்மையோடு இருந்தாலும், சிறிய குழுவை வைத்துச் செய்யப்பட்ட பரிசோதனை என்பதால், இன்னும் பெரிய அளவிலான சோதனை செய்து பார்க்கப்பட வேண்டும் என புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.