கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன். நான் சிகிச்சையில் இருந்தபோது என் மகள் அரியானா 2 மாதங்கள்வரை பள்ளிக்குச் செல்லவில்லை. நான் குணமடைந்து கொண்டிருந்தபோதும், பள்ளிக்குச் சென்று வருவதால் கோவிட் தொற்று வந்து, அது என்னையும் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பள்ளிக்குச் செல்லாமல் எனக்கு உறுதுணையாக இருந்தாள். ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்க அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேன்சர் என்பது குணப்படுத்தக்கூடிய நோய். அதற்கான நவீன சிகிச்சைகள் இன்று நிறைய உள்ளன..” என தெரிவித்திருந்தார்.
இதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, “நீ என்னுடைய ஹீரோ… நண்பர்களே… உங்களுடைய அன்பு, அரவணைப்பு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களை அவருக்கு அனுப்புங்கள்… தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மஹிமாவின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என வாஞ்சையோடு குறிப்பிட்டு இருந்தார் அனுபம் கெர்.