ஒருமுறை டி அண்ட் சி செய்துவிட்டால், அடுத்து இனிமேல் அதிகப்படியான உதிரப்போக்கே இருக்காது என்றோ, கட்டிகளாக வெளியேறாது என்றோ அர்த்தமில்லை. இம்முறை உங்கள் மருத்துவர் சொன்னபடி டி அண்ட் சி செய்து கொள்ளலாம்.
ஆனால் உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான ரத்தப் போக்குக்கும், கட்டிகளாக வெளியேறுவதற்கும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். எனவே அது பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.